ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு, திரைப்படத் துறையினரின் வேலைநிறுத்தம் காரணமாக சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. வேலைநிறுத்தம் முடிந்த உடனே படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டார் மணிரத்னம். ஆனால், அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி இருவரது கால்ஷீட்டும் கிடைக்கவில்லை. அதனால் 'செக்க சிவந்த வானம்' படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது.
இந்த வாரம் 'செக்க சிவந்த வானம்' படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கியுள்ளது. அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் உட்பட அனைத்து நடிகர்களின் காம்பினேஷன் சீன்கள் எடுக்கப்பட இருப்பதால் அத்தனை பேருடைய கால்ஷீட்டையும் வாங்கியுள்ளனர்.
யாராவது ஒரு நடிகர் சொதப்பினாலும் மொத்த படப்பிடிப்பும் கேன்சலாகிவிடும் என்பதால் அரவிந்த் சுவாமி, விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய் ஆகியோரிடம் நிலைமையை விளக்கி ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டாராம் மணிரத்னம்.
குறிப்பாக சிம்பு கால்ஷீட் சொதப்பிவிடக்கூடாது என்பதற்காகவே அவரை டீல் பண்ணுவதற்காகவே இரண்டு பேரை நியமித்திருக்கிறாராம் மணிரத்னம்.