ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சமந்தா. திருமணத்திற்கு பிறகு நடிகைகளின் மார்க்கெட் ஓய்ந்து விடும் என்ற கருத்தை அடியோடு தகர்த்து எறிந்து, இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி உள்ளன.
சமீபத்தில் சமந்தா அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணத்திற்கு பிறகும் சுதந்திரமாக இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், சினிமாவுக்கு வந்த புதிதில் பயந்தேன், பாதுகாப்பு இல்லாத உணர்வு ஏற்பட்டது. நல்லவேளையாக நான் நடித்த படங்கள் எல்லாம் வெற்றி படங்களாக அமைய எனக்கு உற்சாகத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்தது.
சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை உணருகிறேன். திருமணத்திற்கு பிறகும் கணவர் குடும்பத்தார் என்னை சுதந்திரமாக இருக்க அனுமதித்து உள்ளனர். அவர்களின் ஆதரவோடு சினிமாவில் என்னால் தொடர்ந்து சாதிக்க முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.