ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தின் படப்பிடிப்பு திரையுலக வேலைநிறுத்தம் முடிந்த பின் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
சென்னையின் கடற்கரைப் பகுதியில் நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இன்று முதல் விஜய் சேதுபதி கலந்து கொண்டு நடித்து வருகிறார். விஜய் சேதுபதி பல படங்களில் நடித்து வருவதால் அவர் இதுவரை 'செக்கச் சிவந்த வானம்' படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்தார். அதனால், படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் காட்சிகளை மணிரத்னம் படமாக்கி வந்தார்.
தமிழ்த் திரையுலகத்தில் முதல் முறையாக பல முக்கிய நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் படம் இது. மணிரத்னம் இயக்கத்தில் முதல் முறையாக விஜய் சேதுபதி, சிம்பு, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக விஜய் சேதுபதியை படமாக்கி வருவது அற்புதமாக உள்ளதாக படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் புகைப்படத்துடன் தகவலைப் பகிர்ந்துள்ளார்.