ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பெரிய திரையில் நடிகர் ஆனவர் பிரஜின். தமிழ் மற்றும் மலையாள படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர், தீ குளிக்கும் பச்சை மரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு சுற்றுலா, மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை படங்களில் நடிதார்.
ஆனால் சினிமாவில் அவர் நினைத்த அளவிற்கு வெற்றி பெற முடியவில்லை. இப்போது சமுத்திரகனியுடன் ஆண் தேவதை, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர, சின்னத்தம்பி தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர், போர் வரும் என்கிற வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இது அரசியலை பின்னணியாக கொண்ட தொடர். பிரஜின் பத்திரிகை நிருபராக நடிக்கிறார். ஒரு நிருபர் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள் தான் கதை. படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.
மாதவன், பாபி சிம்ஹா, நந்தா ஆகியோர் ஏற்கெனவே வெப்சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.