ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காவிரி விவகாரம், ஏரிகள் பார்வை என திடீர் பரபரப்புக்கு உள்ளாகி இருக்கிறார் நடிகர் சிம்பு. இன்று நடிகர் மன்சூரலிகானை விடுதலை செய்யும்படி காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததை கண்டித்து, பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது கருப்புக் கொடி காட்டிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்த போலீசார், நள்ளிரவில் அவரை சிறையில் அடைக்கப்போவதாக தகவல் வெளியானது.
அப்போது, சீமானை கைது செய்யக்கூடாது என்று நடிகர் மன்சூர் அலிகான் சென்னை பல்லாவரம் திருமண மண்டபத்துக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு போலீசாருடன் ஏற்பட்ட தகராறில் மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்கக் கோரி நடிகர் சிம்பு, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசின் நடவடிக்கை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கு மாநில அரசு என்றால் என்ன என்று தெரியாது கூலாக பதில் சொன்னார் சிம்பு. ஓட்டு மட்டும் போடுகிறீர்களே என்று கேட்டபோது, அது என் கடமை என்றார்.