ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'தரமணி' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. பிரபல ஹோட்டல் அதிபரின் மகனான இவர், தரமணி படத்தை அடுத்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். 'ஆரண்யகாண்டம்' படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா மற்றும் புஷ்கர் காயத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் அருண் மாதேஸ்வரன்.
இவர் இயக்கும் புதிய படத்தில் தான் வசந்த் ரவி அடுத்து ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் நடிகை ரோகிணி நடிக்கிறார். விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.
இந்த படத்திற்கு 'தர்புகா' சிவா இசை அமைக்கிறார். 'ஜில் ஜங் ஜக்' மற்றும் 'அவள்' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.