ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பிரபுதேவா, இந்துஜா மற்றும் பலர் நடித்தள்ள மௌனப் படமான 'மெர்க்குரி' படம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வெளியிடாமல் மற்ற மாநிலங்களில் முதலில் வெளியிட்டுவிட்டதால், இப்படத்திற்கு வரும் விமர்சனம் தமிழ்நாட்டில் வெளியாகும் போது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். அது பற்றி தெரிந்தும் கூட கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டுள்ளார் என திரையுலகில் வருத்தப்படுகிறார்கள். இதற்குப் பிறகு தமிழ்நாட்டில் படம் எப்படி வியாபாரம் ஆகும், வசூலிக்கும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மற்ற மாநிலங்களில் வெளியாகியுள்ள இப்படம் பற்றிய விமர்சனம் வெளிவந்துவிட்டது. ஹாலிவுட்டில் 2016ல் வெளிவந்த 'Don't Breathe' என்ற படத்தின் காப்பிதான் 'மெர்க்குரி' என்கிறார்கள்.
ஐந்து நண்பர்கள் சாலையில் பயணிக்கும் போது எதிர்பாராமல் பிரபுதேவாவை கொன்று விடுகிறார்கள். அவரது உடலை ஒரு காட்டில் வைத்து எரித்தும் விடுகிறார்கள். ஆனால், பிரபுதேவா உயிருடன் வந்து அவர்களை மிரட்டுகிறார். அதன் பின் என்ன என்பதுதான் படத்தின் கதையாம்.
படம் மிகவும் சீரியசாக நகர்கிறது என்கிறார்கள் மற்ற மாநில விமர்சகர்கள்.