ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெய் உடனான காதல் முறிவுக்குப் பிறகு அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளன. சசிகுமாருக்கு ஜோடியாக நாடோடிகள்-2 படத்தில் நடித்து வரும் அஞ்சலி, அடுத்து விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
'பண்ணையாரும் பத்மினியும்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு.அருண் குமார். அந்தப்படம் பாராட்டப்பட்ட அளவுக்கு கமர்ஷியலாக வெற்றியடையவில்லை. எனவே மீண்டும் அவரது இயக்கத்தில் 'சேதுபதி' படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி.
இந்த இரண்டு படங்களைத்தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் அருண் குமார். 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க அஞ்சலியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. விஜய்சேதுபதி படம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் வெளியான 'இறைவி' படத்தில் ஏற்கனவே இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர்.