14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது தனுசுடன் வடசென்னை, விக்ரமுடன் துருவ நட்சத்திரம், மணிரத்னத்தின் செக்கச்செவந்த வானம் என மெகா படங்களாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், வடசென்னை படத்தில் ஸ்லம் பெண்ணாக நடித்துள்ளேன். நானும் சென்னை பெண் என்பதால் சென்னை தமிழ் பேசி நடிப்பதில் கஷ்டம் தெரியவில்லை.
கெளதம்மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் சில நாட்களாக நடிப்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் அவரது ஸ்டைலுக்கு என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். இப்போது பழகி விட்டது.
மணிரத்னம் படத்தில் நடிப்பது என கேரியரிலேயே பெரிய விசயமாக கருதுகிறேன். இந்த படத்தில் என் வேடம் என்ன என்பது பற்றி சொல்ல முடியாது. அவரது படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்திருந்தாலும் மறுக்காமல் நடித்திருப்பேன். இந்த படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வேடத்தை மணிரத்னம் கொடுத்திருக்கிறார் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.