ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சீக்கிரமே முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருபவர் சாய் பல்லவி.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக அவர் நடித்துள்ள கரு படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இதையடுத்து சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் தனுசுடன் மாரி-2 படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் எந்த நடிகைகளையும் போட்டியாக நினைக்கவில்லை. எனது பலம், பலவீனம் எனக்கு நன்றாக தெரியும். நான் எல்லாவிதமான வேடங்களுக்கும் பொருந்த மாட்டேன். அதனால் எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்கிறார் சாய் பல்லவி.