ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் தனுஷ் தங்களின் மகன் என்று மேலூரைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தனுஷ் தனது பிறப்பு மற்றும் பள்ளி சான்றுகள், குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த இந்த ஆவணங்கள் போலியானவை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கதிரேசன் தம்பதிகள் மனு தாக்கல் செய்தனர். வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் புதிதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்து விசாரணை நேற்று நடந்தது.
கதிரேசன் தம்பதிகள் சார்பில் ஆஜரான வக்கில், தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்து தனக்கு சாதகமான தீர்ப்பை பெற்றுள்ளார். அது போலி ஆவணங்கள் என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்கிற தீர்ப்பை தள்ளி வைத்தது நீதிமன்றம்.