ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
3 படத்தின் மூலம் இயக்குநரானவர் ஐஸ்வர்யா தனுஷ். முதல்படம் அளவுக்கு இரண்டாவது படமான வை ராஜா வை வெற்றி பெறவில்லை. அதன்பின், சினிமா ஸ்டன்ட் கலைஞர்களை வைத்து "சினிமா வீரன்" என்ற ஆவணப்படத்தை எடுத்தார்.
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் பதக்கம் வென்ற மாரியப்பனின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்தார். அந்தப்படம் கிடப்பில் உள்ளது. இப்போது புதிதாக ஒரு படத்தை இயக்க உள்ளார்.
அமானுஷ்ய கதைகளின் பின்னணியில் ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாக உள்ளது. தனுஷ் தயாரிக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வனமகன் ஜெயஸ்ரீ கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்தும் முடிவானதும் படம் பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ளார் ஐஸ்வர்யா.