14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பிரேமம் சாய் பல்லவி, மலையாளத்தில் நடித்து வந்தபோது அவரைப்பற்றி கிசுகிசுக்கள் வெளியாகவில்லை. அனால் அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கியதில் இருந்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள் மீடியாக்களில் உலவிக் கொண்டிருக்கின்றன.
குறிப்பாக படப்பிடிப்பு தளத்தில் அவர் ஏகப்பட்ட விதிமுறைகள் போட்டு ஹீரோ, இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் வெறுப்பேற்றி வருகிறார். மிகவும் தலைக்கணமாக நடக்கிறார் என தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதுப்பற்றி, ஏற்கனவே கரு படத்தின் நாயகன் நாக சவுரியாவும், சாய் பல்லவி மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த செய்தி நிஜமாலுமே உண்மைதானா? இல்லை சாய் பல்லவியின் இமேஜை கெடுப்பதற்காக வெளியிடப்பட்டு வருகின்றனவா? என்பது தெரியவில்லை. குறுகிய காலத்தில் புகழ்பெற்ற சாய்பல்லவி, குறுகிய காலத்திலேயே கிசுகிசுக்களில் சிக்கியிருக்கிறார்.