அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'கரு'. இப்படம் தெலுங்கிலும் 'கனம்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இப்படம் மூலம் தெலுங்கு நடிகரான நாக சௌரியா, தமிழில் அறிமுகமாகிறார். 'கரு' படத்தின் இசை வெளியீடு கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. ஆனால், அந்த விழாவில் படத்தின் நாயகனான நாக சௌரியா கலந்து கொள்ளவில்லை.
தெலுங்கு 'கனம்' படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. ஆனாலும், அங்கு நடைபெற்ற விழாவிலும் நாக சௌரியா கலந்து கொள்ளவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது நாயகன் நாக சௌரியாவிற்கும், நாயகி சாய் பல்லவிக்கும் இடையே அடிக்கடி மோதல் எழுந்துள்ளது.
சாய் பல்லவி பற்றி வெளிப்படையாகவே விமர்சனம் செய்திருந்தார் நாக சௌரியா. படப்பிடிப்புக்கு ஒழுங்காக வர மாட்டார், அவருக்காக நாங்கள் அனைவரும் காத்திருப்போம் என்று அவர் சாய் பல்லவி மீது குற்றம் சாட்டியிருந்தார். இது பற்றி பதிலளித்த சாய் பல்லவி, யாரையும் நான் மதிக்காமல் இருந்தது இல்லை. என்னை மீறி ஏதாவது நடந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இருந்தாலும் நாக சௌரியா நேற்று நடைபெற்ற விழாவிலும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார்.