ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை ஸ்ரீதேவி, துபாயில் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவியின் மரணம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. குறிப்பாக ஸ்ரீதேவியின் குடும்பத்தை மிகவும் பாதித்துள்ளது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது...
ஒரு நல்ல நண்பராக, மனைவியாக இரு குழந்தைகளுக்கு தாயாக இருந்தவரை திடீரென இழப்பது என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்தநேரத்தில் எங்களுக்கு துணையாக இருந்த திரையுலகினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி.
அதேப்போன்று எனக்கும், மகள்கள் ஜான்வி மற்றும் குஷியை அர்ஜூன் மற்றும் அன்ஷூலா(போனி கபூரின் முதல் மனைவி வாரிசுகள்) ஆதரித்தது மூலம் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணருகிறேன். இந்த இழப்பை எதிர்கொள்ள முயற்சிக்கிறோம்.
திரையுலகிற்கு ஸ்ரீதேவி சாந்தினி, சிறந்த நடிகை. எனக்கோ அவர் நல்ல நண்பர், காதலி, தாய் மற்றும் மனைவி. மகள்களுக்கு எல்லாமே அவர் தான். எங்கள் குடும்பம் ஓட அச்சாணியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி.
இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள். ஸ்ரீதேவி பற்றி பேச நினைத்தால் அவரைப்பற்றிய நினைவுகளை பேசுங்கள். அவர் ஒரு நடிகை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இனி என் கவனம் எல்லாம் என் மகள்களை எப்படி முன்னெடுத்து செல்வது, அவர்களை எப்படி நல்வழியில் வழிநடத்துவதில் தான் இருக்கிறது.
எங்களின் வாழ்க்கை, பலம், நாங்கள் சிந்தும் சிரிப்பு எல்லாவற்றுக்கும் ஸ்ரீதேவி தான் காரணம். அமைதி கொள் என் அன்பே. நீ இல்லாத எங்கள் வாழ்க்கை முன்பு போல் இருக்கப்போவது இல்லை.
இவ்வாறு போனி கபூர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.