ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சுமார் 8 வருடங்களுக்கு முன், அதாவது 2010-ல் பவன் கல்யான் ஜோடியாக 'புலி' என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிகிஷா பட்டேல். அதன் பிறகு தமிழில் ஜெ.ஜெ.டிவி பாஸ்கரனுக்கு ஜோடியாக 'தலைவன்' என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் ஜோடியாக 'என்னமோ ஏதோ'படத்தில் நடித்தார் நிகிஷா பட்டேல்.தொடர்ந்து, 'கரையோரம்', 'நாரதன்', '7 நாட்கள்' ஆகிய படங்களில் நடித்தும் அவரால் தமிழில் க்ளிக்காக முடியவில்லை. இந்நிலையில் இப்போது தெலுங்கு படங்களில் நடிக்க மீண்டும் ஆர்வம் காட்டி வருகிறார் நிகிஷா பட்டேல். அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் தெலுங்குப் படத்தில் நிகிஷா பட்டேலுக்கு அதிரடி ஆக்ஷன் கலந்த கேரக்டர்.
இந்த கேரக்டரில் நடிக்க முதலில் இறுதிச்சுற்று ரித்திகா சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்ன காரணத்தினாலோ ரித்திகா நடிக்க மறுத்துவிட்டதால், நிகிஷா பட்டேலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப்படத்தில் நடிப்பது குறித்து, ''நான் நிஜத்தில் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை. எனக்கு ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை இருந்தது. அந்த ஆசை இந்த படம் மூலம் நிறைவேறியுள்ளது.” என்று கூறியுள்ள நிகிஷா பட்டேல், தொடர்ந்து இதுபோன்ற ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புகிறாராம்.