ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் மலையாளப் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தமிழ் நடிகை சாய் பல்லவி. தமிழில் அறிமுகமாக மிகவும் தாமதம் செய்து வந்தார். பல இயக்குனர்கள் அவரைத் தொடர்பு கொண்டு நடிக்கக் கேட்டபோதும் நடிக்க மறுத்தார். அதேசமயம் தெலுங்கிலும் சில படங்களிலும் நாயகியாக நடித்து விட்டார்.
சாய் பல்லவி தமிழில் நாயகியாக அறிமுகமாகும் கரு படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழில் அறிமுகமாக தாமதம் ஆனது ஏன் என்பது குறித்து பேசினார்.
பிரேமம் படத்தில் நடித்த பிறகு எங்கே போனாலும் தமிழில் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தார்கள். கரு படத்தின் கதையைப் போல ஒரு கதைக்காகத்தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். படத்தில் பேபி வெரோனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் போட்டி போட்டு பல காட்சிகளில் நடிக்க வேண்டி இருந்தது" என்றார்.
சாய் பல்லவி மேடையில் தமிழில் பேசியதை விட ஆங்கிலத்தில் தான் அதிகம் பேசினார்.
இயக்குநர் விஜய் பேசும்போது, கரு படம் கமிட்டானபோது, அதில் வேறு ஒரு குழந்தையை தான் நடிக்க வைத்தோம். அவரை வைத்து தான் கரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் கடைசியில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். அதன்பின்னர் விளம்பரம் ஒன்றில் பேபி வெரோனிகா பார்த்து இந்தப்படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயம் சாய் பல்லவிக்கே தெரியாது. இப்போது தான் சொல்கிறேன் என்றார்.