ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள் என, மக்கள் ஒரு போதும் நம்பக்கூடாது; அவர்களை தோற்கடிக்க வேண்டும், என, நடிகர் சத்யராஜ் பேசினார்.
சென்னையில், நடந்த விழா ஒன்றில், அவர் பேசியதாவது: நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்திகளாகி வருகின்றன. நடிகர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்; ஏன், நானே, மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறேன் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். பிரபல நடிகர்கள் என்பதால், எல்லாம் தெரிந்தவர்கள் என, அவர்களை ஒரு போதும் நம்பி விடாதீர்கள்; அவ்வாறு நினைப்பது தவறு. நடிகர்கள் அரசியலில் தோற்றால், அது, பெரிய தோல்வி அல்ல. வெற்றி பெற்றால், உங்கள் நிலைமை என்னவாகும் என, யோசியுங்கள். எனவே, நடிகர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு சத்யராஜ் பேசினார்.
நடிகர்கள் ரஜினியும், கமலும் அரசியலில் களம் காண உள்ள நிலையில், அவர்களின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் சத்யராஜ் இவ்வாறு பேசியிருக்கிறார்.