ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. இப்படத்தில் அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியினால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நரகாசூரன் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்தநிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நரகாசூரன் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவில்லை என்றும், வில்லன் போன்றதொரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல சந்தீப்கிஷன் ஏற்றுள்ள கதாபாத்திரம் வழக்கமான வில்லன் கேரக்டர் இல்லையாம்.
இது ஒருபக்கம் இருக்க, இந்த படத்தின் ரீ-ரெக்கார்டிங் வேலைகள் மாசிடோனியா (Macedonia) என்ற நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் படம் வெற்றியடைந்ததால் தன்னுடைய நடவடிக்கை தொடங்கி, பிலிம் மேக்கிங் வரை எல்லாவற்றிலும் ஹை பையாக இருக்கிறார் கார்த்திக் நரேன்.