ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த வாரம் ஐதராபாத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்றார் தமன்னா. அப்போது, அவரது ரசிகர் ஒருவர் அவர் மீது ஷூவை கழற்றி எறிந்தார். இதனால் பெரும் அதிர்ச்சியடைந்தார் தமன்னா. அதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தபோது, சமீபகாலமாக தமன்னா சரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை. அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறியிருந்தார்.
இந்தநிலையில், தற்போது அதுகுறித்து ஒரு ஆங்கில பத்திரிகைக்கு தமன்னா பேட்டி அளித்துள்ளார். அதில், பெரும்பாலும் நடிகைகள் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது மலர் கொத்துதான் தருவார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஷூவை கொடுத்து வரவேற்றுள்ளார் என்று கூறிய தமன்னா, இந்த சம்பவம் அந்த ஸ்பாட்டில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தபோதும், பின்னர் அதை ஒரு விளையாட்டாகவே எடுத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.