ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகர் ரகுவரன். ஹீரோ, வில்லன், குணச்சித்ரம் என பல முகங்களை காட்டியவர். இவரைப்பற்றி வெளியில் தெரியாத மற்றுமொரு ஒரு அபூர்வம், சிறந்த இசைக் கலைஞர் என்பது. லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் பியானோவில் தேர்ச்சி பெற்றவர்.
சமீபத்தில் இவர் இசையமைத்த சில பாடல்களை தொகுத்து "ரகுவரன் எ மியூசிக்கல் ஜர்னி" என்ற பெயரில் ஒரு ஆல்பம் வெளியிட்டனர். இதை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட, ரகுவரனின் மகன் ரிஷிவரன் பெற்றுக் கொண்டார். ரகுவரனுக்குள் இப்படி ஒரு இசைத் திறமை இருந்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுப்பற்றி ரகுவரனின் மனைவி ரோகிணி நம்மிடம் கூறியதாவது... ஷூட்டிங் முடிந்து நேராக வீட்டுக்கு வந்து விடுவார். பார்டி போன்று எதிலும் பங்கேற்க மாட்டார். கதை சொல்ல வருபவர்கள் கூட வீட்டில் வந்து தான் சொல்வார்கள். வீட்டில் இருக்கும்போது பெரும்பாலும் பியோனோவில் தான் இசையமைத்து கொண்டிருப்பார் பியானோவில் அவர் கைதேர்ந்தவர்.
நிறைய மியூசிக் பிட் உருவாக்கி வைத்திருக்கிறார். இவரும், இவரது நண்பர் ராஜன் சர்மாவும் இணைந்து இதுபோன்ற மியூசிக்கல் பிட்டை உருவாக்கி வைத்திருந்தனர். இதை எல்லாம் ஆல்பமாக வெளியிட ஓராண்டாகவே பணி நடந்து வந்தது. என் கணவர் பாடி, இசையமைத்து வைத்ததில் ஐந்து பாடல்களை ஆல்பமாக தொகுக்க முடிந்தது. இன்னும் நிறைய மியூசிக்கல் பிட்ஸ் உள்ளன. நடிப்பு, இசை இதைவிட்டால் ஆன்மிகத்திலும் கொஞ்சம் நாட்டமிக்கவர். அவர் தீவிர சாய்பாபாவின் பக்தர்.
என் மகன் ரிஷிவரன் (19). அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள எமிரி பல்கலைக்கழகத்தில் பிரீ-மெடிக்கல் இரண்டாவது ஆண்டு படிக்கிறார். இந்த கல்லூரியில் தான் படிக்க வேண்டும் என்று அவனே தேர்வு செய்து படித்து வருகிறார். என் மகனிடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று சொன்னால் கூட பயப்படுவான்.
அவனிடத்தில் அப்பா ஆல்பத்தை ரஜினி வெளியிட உள்ளார். நீயும் வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்றேன். ரஜினி சில அறிவுரைகளை வழங்கினார். என் மகனை பற்றி பலரும் தெரிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அவனின் போட்டோ வெளியானதில் இருந்து கடந்த மூன்று நாட்களாக தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் இருந்து போன் போன் மேல் வருகிறது. எப்போது உங்கள் மகன் நடிப்பார் என்று கேட்கிறார்கள். டாக்டராக வேண்டும் என்பதே அவரது லட்சியம், அதனால் இப்போதைக்கு அவர் நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டேன்.
இவ்வாறு ரோகிணி கூறினார்.