ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
திரைப்பட நடிகர்கள், நடிகைகளின் ரசிகர்களை தீவிர ரசிகர்கள், வெறித்தனமான ரசிகர்கள், சாதாரண ரசிகர்கள், அவர்களது படங்களை மட்டுமே ரசிக்கும் ரசிகர்கள் எனப் பிரிக்கலாம். இப்போது சமூக வலைத்தளங்களில் சண்டை போட்டுக் கொள்ளும் ரசிகர்களை வெறித்தனமான ரசிகர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். பல சமயங்களில் வரம்பு மீறி அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அதை சம்பந்தப்பட்டவர்களின் நடிகர்கள் அதிகம் கண்டு கொள்வதில்லை. அப்படியே அவர்கள் சொன்னாலும் அதை அந்த ரசிகர்கள் கேட்பதாக இல்லை.
நடிகர்களுக்குத் தீவிர ரசிகர்கள் சரி, நடிகைகளுக்குத் தீவிர, வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். அப்படிப்பட்ட ஒரு ரசிகரால்தான் சில தினங்களுக்கு முன்பு தமன்னா மீது செருப்பு தாக்குதல் நடந்தது. ஆனால், அந்த செருப்பு அவர் மீது விழாமல் போய்விட்டது. அவரைக் கைது செய்து விசாரித்த போலீசிடம் அவர் சொன்ன தகவல்தான் இப்போது டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறதாம்.
தமன்னா நல்ல படங்களைத் தேர்வு செய்து நடிப்பதில்லை என்ற வருத்தத்தில்தான் அந்த ரசிகர் செருப்பு வீசினாராம். எந்த பந்தாவும் இல்லாமல் சாதாரணமாகப் பழகும் குணம் கொண்டவர் தமன்னா. எவ்வளவு கோபம் வந்தால் கூட அதிர்ந்து பேசாதவர். சர்ச்சைக்குரிய எந்தப் படங்களிலும் நடிக்காதவர். அவர் மீது போய் ஒரு ரசிகர் இப்படி செய்துவிட்டாரே என்று தமன்னாவுக்கு நெருக்கமானவர்கள் மிகவும் வருத்தப்பட்டுள்ளார்கள். தமன்னாவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் வருத்தப்பட்டாராம்.
பாகுபலி, ஊபிரி ஆகிய படங்களுக்குப் பிறகு தமன்னா நடித்து கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு நேரடித் தெலுங்குப் படமும் வரவில்லை. இப்போதுதான் அவர் மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஒருவேளை அந்தக் கோபத்தில்தான் அவர் செருப்பை எறிந்திருப்பார் என்கிறார்கள். இப்படியும் பாசக்கார ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.