ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை, என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார்.
பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்டம், அலங்காநல்லுாரில், தி.மு.க.,வினர் சாலை மறியல் செய்து, கைதாகினர். திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட இவர்களை சந்தித்த பின், உதயநிதி கூறியதாவது: மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால், முதலில் வருவது, தி.மு.க.,வும், அதன் தொண்டர்களும் தான். சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க, எனக்கு விருப்பம் இருந்தாலும், படப்பிடிப்பு காரணமாக பங்கேற்க இயலவில்லை. அடுத்த போராட்டங்களில் கலந்து கொள்வேன்.
கட்சிக்காக உழைக்க வந்துள்ளேன்; பதவிக்காக வரவில்லை. அரசியலுக்கு நான், திடீர் என வரவில்லை. பிறந்ததில் இருந்தே, அரசியலில் தான் இருக்கிறேன். ஆறு ஆண்டுகளாக, தமிழ் பெயர் வைத்த, என் படங்களுக்கு மட்டும் வரி விலக்கு அளிக்கவில்லை. அதன் பெயரும் அரசியல் தான். கமல், ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.