ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பிரபல சினிமா பைனான்சியர் முகுன்சந்த் போத்ரா. இவர், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கஸ்தூரிராஜா ஆகியோர் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். போத்ரா தன்னை மிரட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் புகார் கூறியிருந்தார். மிரட்டிப் பணம் பறித்த புகாரில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் போத்ரா.
போத்ராவின் மகன்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து தன் மீதான வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறு ரஜினி, சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்ற ஐகோர்ட், வழக்கை தள்ளுபடி செய்தது. இந்நிலையில் தன் மீது அவதூறு புகார் கூறியதாக போத்ரா, ரஜினி மீது வழக்கு தொடர்திருந்தார். இவ்வழக்கை இன்று (ஜன.,19) விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ஜனவரி 25 ம் தேதிக்குள் பதிலளிக்க ரஜினிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.