ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்திலும் ஒவ்வொரு வருடமும் பல புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெற்றிகரமான நாயகியாகவும், புகழ் அடையும் நாயகியாக வளர்கிறார்கள்.
நடித்து ஒரு படம் கூட வெளிவராத நிலையில் ஒரே சமயத்தில் நான்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனவர் கீர்த்தி சுரேஷ். அவர் நடித்து முதலில் வெளிவந்த படம் 'இது என்ன மாயம்'. ஆனால், அவர் முதலில் நடிக்க ஒப்பந்தம் ஆன படம் 'ரஜினி முருகன்'. முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே 'பாம்பு சட்டை, தொடரி' ஆகிய படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
'ரஜினி முருகன்' படத்தின் வெற்றி கீர்த்தி சுரேஷை வெற்றிகரமான நாயகியாக மாற்றியது. விஜய்யுடனும் 'பைரவா' படத்தில் ஜோடி சேர்ந்தவர், சூர்யாவுடனும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். பள்ளியில் படித்த காலத்திலேயே சூர்யாவின் ரசிகையாக இருந்தேன் என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இப்போது கீர்த்தி சுரேஷ் வழியிலேயே சூர்யாவுடைய ரசிகையாக இருந்த சாய் பல்லவி, அடுத்து அவருடன் ஜோடியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கீர்த்தி சுரேஷ் போலவே தமிழில் ஒரு படம் வெளிவருவதற்கு முன்பாகவே தனுஷுடன் 'மாரி 2', சூர்யாவுடன் ஒரு படம் என ஒப்பந்தம் ஆகிவிட்டார் சாய் பல்லவி. அவர் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் 'கரு' படம் அடுத்த மாதம்தான் வெளிவர உள்ளது.