சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
அரசியல் களத்தில் டுவீட் புரட்சி செய்து வந்த கமல், சில வாரங்களாக அமைதியாக இருக்கிறார். காரணம்... அவரது இயக்கத்தில் உருவாகி வரும் விஸ்வரூபம்-2 படத்தின் ஒலிச்சேர்க்கை பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருவதுதான். சில வாரங்களாக அங்கே முகாமிட்டு விஸ்வரூபம்-2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார், ஆன்ட்ரியா நடிப்பில் 2013ஆம் ஆண்டு ரிலீஸான படம் 'விஸ்வரூபம். முதல் பாகத்தை இயக்கும்போதே, இரண்டாம் பாகத்துக்கான பெரும்பாலான காட்சிகளையும் படமாக்கி வைத்திருந்தார் கமல்ஹாசன். எனவே, உடனடியாக இரண்டாம் பாகம் தொடங்கப்பட்ட நிலையில், அதன் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிக்கும், கமலுக்கும் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால், படம் பாதியிலேயே நின்றது.
ஆஸ்கர் ரவி கொடுத்த பணத்தை செட்டில் பண்ணிவிட்டு 'விஸ்வரூபம் 2' படத்தை தானே தயாரிக்கும் முடிவில் தான் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்தார். தற்போது ஆஸ்கர் ரவி விஸ்வரூபம்-2 படத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு தான், தயாரிப்பு - கமல் சந்திரஹாசன் என்ற டைட்டில் கார்டு பின்னணியில் அமெரிக்க கலைஞர்களுடன் போட்டோ எடுத்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளாராம் கமல்.
ஆக அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்...!