ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த நிலையில் சந்தானம் கோவை, கொடிசியா சார்பில் நடத்தப்படும் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க கோவை சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் பேசும்போது, இனி காமெடியனாக நடிக்க மாட்டேன். விரைவில் படம் இயக்குவேன் என்றார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
சின்னத்திரையில் இருந்து வந்து சினிமாவில் நடிக்க தொடங்கினேன். சுமார் 120 படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து உள்ளேன். அதன்பின்னர் படம் தயாரித்தேன். தற்போது ஹீரோவோக நடிக்க தொடங்கி உள்ளேன். இனி நான் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதில்லை என்று முடிவு எடுத்து உள்ளேன்.
நான் ஹீரோவாக நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். தற்போது நான் ஹீரோவாக நடித்து வெளிவந்துள்ள சக்கைப்போடு போடு ராஜா என்ற படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற பிப்ரவரி மாதம் நான் ஹீரோவாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர இன்னும் 2 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறேன்.
சின்னத்திரை தொகுப்பாளராக, நடிகராக, தயாரிப்பாளராக என்னை நிரூபித்து விட்டேன். வாழ்க்கையில் நாம் அடுத்த கட்டத்துக்கு தொடர்ந்து முன்னேற வேண்டும். விரைவில் புதிய படம் ஒன்று இயக்க உள்ளேன். சூப்பர் ஹீரோ போன்று கதையம்சம் உள்ள இந்த படத்தில் நான் ஹீரோவாக நடிக்க மாட்டேன். முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்க, நான் இயக்குவேன் என்றார் சந்தானம்.