ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரேமம் படத்தில், மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கும், இறுதிச் சுற்று படத்தில், மதியாக நடித்த ரித்திகா சிங்கிற்கும் எவ்வளவு வரவேற்பு கிடைத்து உள்ளதோ, அதேபோன்ற வரவேற்பு, அருவி படத்தில் நடித்த, அதிதி பாலனுக்கும் கிடைத்துள்ளது. இதில், அவரது நடிப்பை பார்த்து, ஒட்டுமொத்த கோலிவுட்டும், 'வாடி ராசாத்தி' என, சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ளது. இந்த படத்தில், அதிதி பாலனை ஒப்பந்தம் செய்வதற்கு முன், இரண்டு முன்னணி ஹீரோயின்களுக்கு, கதை சொன்னாராம் இயக்குனர். ஆனால், அவர்கள், 'இதெல்லாம் ஒரு கதையா' என்ற ரீதியில் பேச, அதிதிக்கு அடித்தது அதிர்ஷ்டம். இப்போது, கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் பலர், 'கால்ஷீட்' கேட்டு, அதிதியை முற்றுகையிட்டு வருகின்றனர். 'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என, சும்மாவா சொன்னார்கள்.