ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? |
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு சிம்பு, மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார். ஏஏஏ படத்தின் பெரும் தோல்வி, தயாரிப்பாளரின் புகார் ஆகியவற்றுக்கு பிறகு சிம்பு இனி படங்களில் நடிக்க தடைவிதிக்கப்படலாம் என்கிற நிலையில் உற்சாகத்துடன் மணிரத்னம் டீமில் இணைந்திருக்கிறார் சிம்பு.
சமீபதில் தான் இசை அமைத்த சக்கபோடு போடு ராஜா படத்தின் பாடல்களை மணிரத்னத்தை சந்தித்து வழங்கினார் சிம்பு. பாடல்களை பாராட்டிய மணிரத்தனம், தன் படத்தில் அவரது கேரக்டர் பற்றி விளக்கி கூறியதோடு. தனது வழக்கப்படி படத்திற்கு முந்தைய ஒத்திகை மற்றும் பயிற்சியையும் தொடங்கி உள்ளார்.
சிம்புவை பற்றி நன்கு அறிந்திருக்கும் சுஹாசினி, ஒப்பந்தத்தில் கடுமையான விதிமுறைகளை சேர்த்து சிம்புவிடம் கையெழுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர வேண்டும். அவரால் பொருள் இழப்பு ஏற்பட்டால் அதனை இரு மடங்காக திருப்பித் தரவேண்டும் என்பது அந்த ஒப்பந்தத்தில் முக்கிய விதி என்று கூறப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடாத சிம்பு, இழந்து விட்ட தனது இமேஜை தூக்கி நிறுத்த இருக்கும் ஒரே வாய்ப்பு மணிரத்னம் படம் தான் என்பதால் அதற்கு சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது. என்றாலும் மணிரத்னம் படத்தில் சிம்பு சோலோ ஹீரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். படத்திற்கான ஒத்திகையும், பயிற்சியும் தொடங்கியுள்ளது.