ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் வீசிய ஓகி புயலால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களை நடிகர் ஜி.வி.பிரகாசும், ஆரியும் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார்கள். பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று ஆறுதல் கூற வந்தோம் ஆனால் இங்கே இதுவரை மொத்தம் 60க்கும் மேற்பட்ட மக்கள் இறந்ததாக கூறுகிறார்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ரெம்யாஸ், ரஜுஸ்,ஜெயின், ஆண்டனி என நால்வர் உயிர் இழந்துள்ளனர் அந்த குடும்பத்தில் அனைத்து ஆண்களும் இறந்துவிட்டார்கள் அவர்களை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீடு திரும்பவில்லை என்று கூறும் போது மனது படபடக்கிறது. மீனைத்தேடி கடல் சென்றவர்கள் பிணங்களாக வருகிறார்கள்
இவர்களின் வாழ்வாதாரமே இந்த மீன்பிடி தொழில் தான் ஆனால் முறையான தொழில் நுட்பம் இல்லாமல் கடலில் சென்றதால் இம்மாவட்டத்தின் பாதி குடும்பத்தில் ஆண்களை இழந்து பெண்கள் விதவைகளாக வாழ்கிறார்கள். மேலும் ரப்பர் தோட்டம், வாழை தோட்டம் போன்றவைகளோடு விவசாயமும் அழிந்ததால் அவர்கள் வாழ வழியின்றி இருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் அரசு மீனவர்கள் மீன்பிடிக்க விஞ்ஞான முறையில் அவர்களுக்கான சாதனங்களை ஏற்படுத்தி தரவேண்டும்
வெளிநாட்டில் உள்ளது போல் ஆளில்லா விமானம் மூலம் கடலில் மீனவ மக்களை கண்டுபிடித்தல் போன்றவற்றை அரசு உடனே செய்து உதவிட வேண்டும். மேலும் அண்டை நாடுகளில் மீனவர்களுக்கான தொழில்நுட்பத்தை அந்தந்த அரசுகள் ஏற்படுத்தி தருவதைபோல் நம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஏற்படுத்தி நம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே இந்த இழப்பு நமக்கு உருவாக்கி உள்ளது என்றனர்.