ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்கம் பொதுக் கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ரகளை மற்றும் அடிதடி நடந்ததால், கூட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்திலேயே கூட்டம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்து வெளியே வந்த தயாரிப்பாளர்கள் சிலர், சங்க தலைவர் விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்நிலையில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் விஷால் ஆலோசனையில் ஈடுபட்டார். சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து விஷால் செய்தியாளர்களை சந்தித்து, கூட்டத்தில் நடந்தவைகள் குறித்து விவரித்தார்.
அப்போது பேசிய அவர், சில சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடந்தாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க ஆண்டு பொதுக் கூட்டம் நல்லபடியாக நிறைவடைந்தது. என்னவெல்லாம் நடந்தது, யார் எல்லாம் மைக்கை பிடிங்கி அடிக்க வந்தார்கள், யார் ரகளையில் ஈடுபட்டனர் என அனைத்தும் பதிவாகி உள்ளது. நீதிபதி ராமநாதன் அனைத்து நிகழ்வுகளையும் கண்காணித்தார்.
எதிர்ப்பை பதிவு செய்த முறை தவறானது. சங்கத்தில் ஊழல் என ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் தரக்குறைவாக நடந்த செயல்கள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிலர் என் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக நடக்க வேண்டிய நல்ல விஷயங்களை நடக்க விடாமல் தடுக்கிறார்கள். முறைகேடு நடந்திருந்தார் இப்படி தைரியமாக பொதுக் கூட்டம் நடத்த முடியாது. முறைகேடு நடந்ததற்கு ஆதாரம் இருந்தால் கொண்டு வரட்டும், பதில் சொல்கிறேன். ஆர்.கே.நகர் தேர்தலில் நான் வேட்புமனு தாக்கல் செய்தது எனத தனிப்பட்ட முடிவு. நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என சங்க விதியில் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் விதிகளின்படியே செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.