ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இடைத் தேர்தலை விடவும் தமிழ்நாட்டின் சினிமா நிலவரம் தான் பல புதுப்புதுத் திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்தத் திருப்பங்களில் ஒன்றாக சிம்பு இசையமைத்த 'சக்கப் போடு போடு ராஜா' இசை வெளியீட்டில் தனுஷ் கலந்து கொண்டதும், புதிய திருப்பங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
சிம்புவும், தனுஷும் அவ்வளவு நெருக்கமானவர்கள் இல்லை என்பது திரையுலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும் அந்த இசை வெளியீட்டு மேடையில் அவர்களது நெருக்கத்தையும், பாசத்தையும் பார்த்தவர்களுக்கு விக்ரமன் படப்பாடல் பின்னணியில் ஒலித்திருக்கும்.
சிம்பு மீது தனுஷுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம், அல்லது தனுஷ் மீது சிம்புவுக்கு ஏன் இந்த திடீர்ப் பாசம் எனப் பலரும் தலையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். விஜய், அஜித்திற்குப் பிறகு சிம்பு, தனுஷ் என ஒரு நிலை உருவாகலாம் என சில வருடங்களுக்கு முன்பு பேசப்பட்டது.
ஆனால், சிம்புவால் தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. அவரைப் பற்றியும் பல சர்ச்சைகள். அந்த சர்ச்சைகளின் பெரும் சர்ச்சையாக 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத் தயாரிப்பாளர் புகாரும், தொடர்ந்து சிம்பு மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் நிலைமையும் இருக்கிறது.
விஷாலுக்கு எதிரானவர் என்ற நிலையை சிம்பு நடிகர் சங்கத் தேர்தலிலேயே கடைபிடித்து வருகிறார். ஆனால், தனுஷ் அந்த விஷயத்தில் தான் எந்தப் பக்கம் என்பதை இதுவரை வெளிப்படுத்தாமலே இருக்கிறார்.
சிம்புவும், தனுஷும் அடுத்து திரையுலகில் தங்களின் சகாப்தம் தான் அடுத்தது என்பதை மற்றவர்களுக்கும் புரிய வைக்கவே சில நலம் விரும்பிகளால் மீண்டும் சேர்த்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள்.
'சக்கப் போடு போடு ராஜா' நிகழ்ச்சி மேடையில் நடந்த சிம்பு, தனுஷ் பாசம் அவர்களது ரசிகர்களைப் பொறுத்தவரையில் ஒரு கொண்டாட்டத்தைக் கொடுத்திருக்கும். அது யாருக்கு சக்கையாக அமையப் போகிறது, யாரை ராஜாவாக்கப் போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.