மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் படம் 'இரும்புத்திரை. அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கும் இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க, சமந்தா கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
'இரும்புத்திரை' படத்தின் பிசினஸ் தொடங்கிய உடனே கேரள தியேட்டரிகல் ரைட்ஸ் விற்பனையாகிவிட்டது. 'இருமுகன்', 'புலி', 'சாமி 2' போன்ற படங்களின் தயாரிப்பாளரான ஷிபு தமீன்ஸ் கேரளா விநியோக உரிமையை பெரியவிலை கொடுத்து வாங்கியுள்ளார்.
விஷால் நடித்த முந்தைய படங்களின் கேரளா உரிமையைவிட இரும்புத்திரை படத்தின் உரிமை பெரியவில்லைக்குப் போனது எப்படி? மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து 'வில்லன்'என்ற படத்தில் விஷால் நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் விஷாலுக்கு கேரள மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. எனவே தான் விஷாலுக்கு கேரளாவில் மார்க்கெட் உயர்ந்துள்ளது.