ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மோகன்ராஜா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீடு டிசம்பர் மாதம் 3ம் தேதி சென்னையில் உள்ள பெரிய ஸ்டார் ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தையொட்டி நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் விழாவில் நயன்தாரா கலந்து கொண்டார். ஆனால், அந்த நிகழ்வு படக்குழுவினருக்கான நிகழ்வு என்பதால் பத்திரிகையாளர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. அந்த விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய பிறந்த நாளுக்கான கேக்கையும் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா.
'அறம்' படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சில தியேட்டர்களுக்கு நேரடியாகச் சென்று படத்தை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை நேரில் பார்த்தார். இதுவரை தான் நடிக்கும் எந்த ஒரு பட விழாவுக்கும் வராத நயன்தாரா, சமீப காலமாக விழாக்களில் கலந்து கொள்வது திரையுலகில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் ஏன் இந்த திடீர் மாற்றம் எனப் பலரும் பேசி வருகிறார்கள். அது நிரந்தரமானதா அல்லது தற்காலிகமானதா என்பது இரண்டு நாளில் நடக்கும் 'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் தெரிந்துவிடும்.
நயன்தாரா அந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளார் என்றே தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 'வேலைக்காரன்' விழாவில் நயன்தாரா கலந்து கொண்டால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் பட விழாக்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தந்தப் படக்குழுவினரும் எதிர்பார்ப்பார்கள். 'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொண்டால் அதுதான் அன்றைய திரையுலகப் பரபரப்புச் செய்தி.