ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகத்தில் ஒரு தயாரிப்பளர் தற்கொலை செய்து கொண்டு அகால மரணமடைந்ததற்கு சாதாரண ரசிகர்களே வருத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக கமெண்ட்டுகளைப் போட்டு வருகின்றனர்.
அதே சமயம் அன்புச் செழியனிடம் பணம் வாங்கி படமெடுத்த சில தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தத்தால் ஒன்று கூடி, தங்கள் சக தயாரிப்பாளருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தாமல் பைனான்சியரைக் காப்பாற்ற கூட்டம் நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் கடைசியாகப் பணிபுரிந்த 'கொடி வீரன்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய டுவிட்டரில், “அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள். நான் சந்தித்தவர்களிலேயே நீங்கள் சிறந்த மனிதர். நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள். அன்புச்செழியன் போன்ற .................. நமது சினிமாவில் இருக்கக் கூடாது,” என மூன்று நாட்களுக்கு முன்பே டுவீட் செய்திருந்தார்.
நேற்று திரும்பவும், “அவர் இந்த உலகத்தை விட்டுச் சென்றுவிட்டார். நாம் ஒரு விஷயத்தை மட்டும் செய்ய முடியும். .................. அன்புச்செழியனுக்கு மிகப் பெரும் தண்டனையைக் கொடுக்க வேண்டும். இதற்காகவது நாம் ஒன்றாகக் கை கோர்ப்போம்,” என்று டுவீட் செய்திருக்கிறார்.
அன்புச்செழியனுக்கு ஆதரவாக பலரும் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கம் நிலையில் கேரளாவிலிருந்து வந்துள்ள ஒரு நடிகை எதைப் பற்றியும் கவலைப்படாமல் இப்படி தைரியமாக ஒரு டுவீட் செய்திருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது.