ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2013ல் வெளிவந்த 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் நடித்த படங்கள் பெரிய வரவேற்பையும், வசூலையும் பெறவில்லை. அதன் பின் அவர் நடித்து வெளிவந்த 'நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி, கதகளி, மருது, கத்திச் சண்டை' ஆகிய ஏழு படங்களல் சில படங்கள் மிக மிகச் சுமாரான படங்களாகவும், சில படங்கள் மோசமான படங்களாகவும் அமைந்தன.
நடிகர் சங்கச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என அந்தப் பதவிகளுக்காகவும் அவர் ஓடியதாலோ என்னவோ நல்ல கதைகளைத் தேர்வு செய்வதில் தவறிவிட்டார். எப்படியோ சமீபத்தில் வந்த 'துப்பறிவாளன்' படம் அவருடைய மார்க்கெட்டை நிலைநிறுத்துவிட்டது. படத்தை வாங்கியவர்களுக்கு ஓரளவிற்கு லாபத்தையும் கொடுத்துள்ளது. 'துப்பறிவாளன்' படம் 'டிடெக்டிவ்' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு அங்கும் நல்ல விமர்சனத்துடன் லாபத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.
இதனால், 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டே ஆரம்பித்துவிட விஷால் திட்டமிட்டுள்ளாராம். இது பற்றி விஷாலே பேசியுள்ளார். அவர் தற்போது 'இரும்புத் திரை, சண்டக் கோழி 2' ஆகிய படங்களில நடித்து வருகிறார். இதில் 'இரும்புத் திரை' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. கோடை விடுமுறையில் 'சண்டக் கோழி 2' படம் வந்துவிடுமாம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 'துப்பறிவாளன் 2' படத்தை விஷால் ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்.