ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் பாகுபலி எடுக்கப்பட்டது போல், மலையாளத்தில் 'அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மா - கிங் ஆஃப் ட்ராவன்கூர்' என்ற படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகவிருக்கிறது. இந்த படம் கேரளாவில் திருவிதாங்கூர் மகாணத்தை ஆண்ட மகாராஜா அனிழம் திருநாள் மார்த்தாண்டவர்மாவின் வாழ்க்கை வரலாறாம்!
இந்த படத்தில் திருநாள் மார்த்தாண்டவர்மா ராஜா கேரக்டரில் 'பாகுபலி'யில் பல்வாள் தேவனாக நடித்த ராணா நடிக்கிறார். இந்தப்படத்தை பிரபல மலையாளப்பட இயக்குநரான கே.மது இயக்குகிறார்.
மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற 'ஒரு சிபிஐ டைரி குறிப்பு' படம் உட்பட பல மலையாள படங்களை இயக்கியவர் இவர். தவிர, தமிழில் 'மௌனம் சம்மதம்' என்ற படத்தை இயக்கியவரும் இவர்தான்.
ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கவிருக்கிறது. இந்த படத்தில் மலையாளம் தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி கலைஞர்களும் நடிக்கவிருக்கின்றனர்.
இந்தியாவின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்களும், ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். பாகுபலி படத்தைப் போல் இந்தப் படத்தை அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.