14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
தமிழ் சினிமாவில் ஒரு படத்தை எடுத்து முடித்து அதற்கு தணிக்கை சான்றிதழ் வாங்கி வெளியிடுவதற்குள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். ஆளும் அரசாங்கத்தை எதிர்த்து எந்த ஒரு கருத்தையும் பதிவிட முடியாத நிலையே உள்ளது. தமிழில் 'மெர்சல்' படத்தில் அனுமதிக்கப்பட்ட வசனங்கள், அதன் தெலுங்கு டப்பிங்கான 'அதிரிந்தி' படத்தில் அனுமதிக்கப்படவில்லை.
மசாலாப் படங்களுக்கு மத்தியில் மக்களின் பிரச்சனைகளைப் பற்றிச் சொல்லும் படமாக 'அறம்' படம் நேற்று வெளியானது. இப்படத்திற்கு சமூக வலைத்தளங்களில் பெரிய வரவேற்பு கிடைத்தாலும் தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வருபவர்கள் குறைவாகவே உள்ளார்கள். நல்ல படங்களை மக்கள் வரவேற்க வேண்டும் என பலர் கூறினாலும் 'அறம்' படம் இன்னும் மக்களை எட்டாமல்தான் உள்ளது. இருந்தாலும் படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டிவ்வாக உள்ளதால் அடுத்த சில நாட்களில் வசூல் கூடவும் வாய்ப்புள்ளது.
'அறம்' படத்தில் பல வசனங்கள் ஆட்சி, அதிகார மையத்தை எதிர்ப்பதாகவே உள்ளது. அதற்குத் தியேட்டர்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்திற்கு இப்படி வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் மற்றுமொரு நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படமான 'அருவி' படத்தின் டீசருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் நாயகி முன்னணி நடிகை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிதி பாலன் என்ற அறிமுக நடிகைதான் படத்தின் நாயகி. அருண் பிரபு புருஷோத்தமன் என்ற அறிமுக இயக்குனர்தான் படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்ற குரல்களுக்கு மத்தியில் இது போன்ற மக்களின் பிரச்சனைகளை மையப்படுத்திய படங்கள் நாயகியரின் படங்களாக வருவது தமிழ் சினிமாவிற்கு நல்லது. ஹீரோக்களுக்குக் கொட்டிக் கொடுக்கப்படும் பல கோடி சம்பளம், நல்ல சினிமாவுக்கு, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் சினிமாவுக்கு செலவழிக்கப்பட்டால் தமிழ் சினிமாவும் இனி உலக சினிமாவாக மாறும்.