ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பல படங்களில் நடித்தும் ஹீரோவாக க்ளிக்காமால் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடித்த படங்களில் அவரது நடிப்புத்திறமை வெளிப்பட்டிருந்தாலும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த 'இறைவி' படத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.
இறைவி படம் படு தோல்வியடைந்தாலும், நடிகராக அப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய 'பிரேக்'காக அமைந்தது. இறைவி படத்தைத் தொடர்ந்து ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர், விரைவில் வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை, இறவாக்கலாம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
பல படங்களில் நடித்துக் கொண்டு தற்போது பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வேறு ஒருவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தனக்கு சினிமாவில் லைஃப் கொடுத்தவர் என்பதை மறந்து கார்த்திக் சுப்பாரஜிடம் பெரிய சம்பளம் கேட்டாராம் பாபிசிம்ஹா. எனவே, இப்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க 'டிமான்டி காலனி' படத்தில் நடித்த சனந்த் என்பவரை புக் பண்ணியுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பிரபுதேவா நடிக்கும் 'மெர்குரி' படத்திலும் சனந்த் நடித்திருக்கிறார்.