ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான் இயக்கும் எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு காட்சியில் முகாம் காட்டுவதை வழக்கமாக கொண்டு வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் லிங்கா படத்தின் தோல்விக்குப்பிறகு நிறைய படங்களில் குணசித்ர நடிகராக உரு வெடுத்தார். தங்க மகன், ரெமோ என சில படங்களில் நடித்தார். இப்போது பள்ளி பருவத்திலே உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் அவர், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் ஜெயசிம்ஹா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
அந்த படத்தை அடுத்து தமிழில் அரவிந்த்சாமியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் கே.எஸ்.ரவிக்குமார். தற்போது சதுரங்கவேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, இந்த ஆண்டு இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறாராம். இந்த படம் போலீஸ் கதையில் உருவாகயிருப்பதாக கூறப்படுகிறது.