ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நயன்தாரா தன் மானேஜர் ராஜேஷ் என்பவரது பெயரில் தயாரித்துள்ளதாக சொல்லப்படும் படம் - 'அறம்'. கத்தி படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி ஏ.ஆர்.முருகதாசுக்கு நெருக்கடி கொடுத்த மீஞ்சூர் கோபிதான் இந்தப் படத்தின் இயக்குநர்.
கோபி நயினார் என பெயரை மாற்றிக் கொண்டு இப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 'அறம்' படத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். சுனுலட்சுமி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜிப்ரான் இசை அமைக்க, ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள அறம் படம் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போதிய தியேட்டர்கள் கிடைக்காததினால் அறம் படம் ஆயுதபூஜைக்கு வெளியாகவில்லை.
அதன்பிறகு தீபாவளி ரிலீசாக 'அறம்' திரைக்கு வரவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். லேட்டஸ்ட் தகவல்... தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவில்லை. அறம் படத்தை நவம்பர் 3-ஆம் ரிலீஸ் செய்யவிருப்பதாக தற்போது அறிவித்திருக்கிறார்கள்.
கலைப்புலி தாணுவின் இந்திரஜித் உட்பட சுமார் ஆறு படங்கள் அதே தேதியில் வெளியாக உள்ளன. எனவே, அறம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்படலாம்.