ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கார்த்திக், மவுன ராகம் படத்தில் பேசும் புகழ்பெற்ற வசனம் "மிஸ்டர்.சந்திரமவுலி...". அந்த டயலாக் இப்போது கார்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை திரு இயக்குகிறார். தனஞ்செயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, கவுதம் ஜோடியாக ரெஜினி கெசாண்ட்ரா நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர திருவின் மாமனார் இயக்குனர் அகத்தியனும், இயக்குனர் மகேந்திரனும் நடிக்கிறார்கள். சதீஷ் காமெடியன்.
படம் பற்றி இயக்குனர் திரு கூறியதாவது: இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டு போயுள்ளது. இயக்குனர் மகேந்திரன், கார்த்திக் மற்றும் அகத்தியன் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. பல மடங்கு கூடியுள்ள எனது பொறுப்பை நன்கு அறிவேன். படத்தின் இந்த தலைப்பு எங்களுக்கு ஒரு பெரும் பலமாகியுள்ளது. இந்த எல்லா விஷயங்களின் சங்கமம் இந்த படத்தை மிக பெரிய படங்களுக்கு இணையாக ஆக்கி உள்ளது என்கிறார் இயக்குனர் திரு.