ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அடிதடி விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு நடிகர் சந்தானம், சென்னை, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சண்முகசுந்தரம் தரப்பில் அவருக்கு ஆதரவாக பிரேம் ஆனந்த் என்ற வக்கில் பேசியிருக்கிறார். இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர்.
பிரேம் ஆன்ந்த்திற்கு மூக்கில் காயம் ஏற்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அதேப்போன்று சந்தானத்திற்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வக்கில் பிரேம் ஆனந்த், சென்னை வளசரவாக்கம் போலீஸில் சந்தானம் மீது புகார் கொடுத்துள்ளார். சந்தானம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சந்தானம் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் நடிகர் சந்தானம் முன் ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளையோ அல்லது நாளை மறுநாளோ விசாரணைக்கு வரும் என தெரிகிறது.