மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சிம்புவின் மன்மதன் படத்தில் காமெடியன் ஆனவர் சந்தானம். அதையடுத்து கிடுகிடுவென்று வளர்ந்து முன்னணி காமெடியனாகி விட்ட அவர் சமீபகாலமாக ஹீரோவாகி விட்டார். தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அதில், சக்க போடு போடு ராஜா என்ற படத்தில் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த சிம்புவை இசைய மைப்பாளராக்கியிருக்கிறார் சந்தானம்.
இந்த நிலையில், தனது நட்பு வட்டார நடிகர்களான ஆர்யா, ஜீவா, உதயநிதி உள்ளிட்ட சிலர் தங்களது படங்களில் நட்புக்காக ஓரிரு காட்சியல் நடிக்க அழைத்துபோது, உங்களுடன் நட்பாக இருக்க எப்போதும் நான் தயாராக இருக்கிறேன். ஆனால் இனிமேல் நட்புக்காக மற்றவர்களின் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று அடித்து சொல்லி விட்டாராம் சந்தானம்.
இப்படி சொல்லும் சந்தானம், நான் எந்தெந்த நடிகர்களுடன் எல்லாம் காமெடியனாக நடித்தேனோ அவர்கள் எல்லோருமே இப்போதும் என்னுடன் முன்பு போலவே நட்பாக இருக்கிறார்கள். அதோடு, எனது படங்கள் பற்றிய தகவல்களையும் ஆர்வமுடன் கேட்டறிகிறார்கள். அந்த வகையில், என்னை யாரும் போட்டி நடிகராக நினைக்கவில்லை. இப்போதும் நட்பு நடிகராகவே நினைக்கிறார்கள் என்கிறார் சந்தானம்.