ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சசிகுமார் நடித்த பலே வெள்ளையத்தேவா படத்தில் அறிமுகமானவர் தான்யா. இவர் மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ராதாமோகனின் பிருந்தாவனம் படத்தில் நடித்த தான்யா, தற்போது விஜயசேதுபதியுடன் கருப்பன் படத்தில் அவரது மனைவியாக அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி தான்யா கூறுகையில், பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம் படங்களைத் தொடர்ந்து இந்த கருப்பன் படத்தில் மதுரைக்கார பெண்ணாக நடித்துள்ளேன். இதற்கு முந்தைய படங்களில் செய்த சின்னச்சின்ன தவறுகள்கூட இல்லாமல் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளேன். அதற்கு காரணம், இயக்குனர் பன்னீர் செல்வமும், நாயகன் விஜய் சேதுபதியும் தான். எந்த காட்சிகளில் எந்தமாதிரி நடிக்க வேண்டும் என்று எனக்கு சரியான பயிற்சி கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாகத்தான் இந்த படத்தில் என்னால் நன்றாக நடிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். அதோடு, சினிமாவில் நீண்டதூரம் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் இந்த கருப்பன் படம் எனக்கு கொடுத்துள்ளது.
தமிழ் சினிமாவில் தமிழ் நடிகைகள் இல்லை என்கிற ஆதங்கம் அனைவருக்குமே உள்ளது. அதனால் எனக்கு நல்ல ஆதரவு செய்கிறார்கள். அது சந்தோசமாக உள்ளது. இதேபோல் தொடர்ந்து நம்முடைய டைரக்டர்கள் எனக்கு நல்ல படவாய்ப்புகளை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, கருப்பன் படத்திற்கு பிறகு தான்யா எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் நடிப்பார் என்கிற நம்பிக்கை டைரக்டர்களுக்கு ஏற்படும். அதனால், இந்த படம் வெளியான பிறகு அடுத்தடுத்து புதிய படங்கள் எனக்கு புக்காகும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் தான்யா.