ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் இருந்தே காளை மாட்டை அடக்கும் காட்சிகள் இடம்பெற்று வருகின்றன. பின்னர் ரஜினி முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவது போன்ற காட்சியில் நடித்தார். அதேபோன்று பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். தற்போது விஜய் மெர்சல் படத்திலும், விஜய் சேதுபதி கருப்பன் படத்திலும், சண்முகப்பாண்டியன் மதுர வீரன் படத்திலும் காளையை அடக்கும் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள்.
இதில் விஜய் சேதுபதியும், சண்முகப்பாண்யனும் மாடுபிடி வீரர்களாகவே நடிக்கிறார்கள். அப்படி விஜய் சேதுபதி மாடு பிடி வீரராக நடித்துள்ள கருப்பன் படம் வருகிற 29-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கருப்பன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியிடம், காளையை அடக்கும் காட்சியில் நடித்த அனுபவம் பற்றி கேட்டபோது, இந்த படத்தில் நான் மாடுபிடி வீரர் என்பதால் காளையை அடக்குவது போன்ற காட்சி உள்ளது. ஆனால் நிஜமான மாட்டை நான் அடக்கவில்லை. கிராபிக்ஸில் அந்த காட்சி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனபோதும், ரொம்ப தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது என்கிறார் விஜய் சேதுபதி.