ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
வடிவேலுவின் காமெடி கூட்டணியில் உள்ள நடிகர்களில் தாடி பாலாஜியும் ஒருவர். இவர் சமீபகாலமாக விஜய் டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். மேலும், எலி, தெனாலிராமன் படங்களுக்குப்பிறகு வடிவேலு காமெடியனாக நடித்த கத்திச்சண்டை படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார்.
இந்நிலையில், வடிவேலுவுடன் தான் நடித்து வருவதைப்பற்றி தாடி பாலாஜி கூறும்போது, தான் நடிக்கும் பல படங்களில் எனக்கு காமெடி வாய்ப்பு கொடுத்தவர் வடிவேலு. அவர் ஹீரோ ஆனது என்னைப்போன்றவர்களுக்கு இழப்புதான். அதனால் தான் சின்னத்திரைக்கு வர வேண்டிய நிலை உருவானது. என்றாலும் பிசியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
மேலும், முன்பெல்லாம் வடிவேலு ஒரு காட்சியில் நடிக்கும்போது அந்த காட்சி குறித்து மற்றவர்களிடம் கருத்தே கேட்க மாட்டார். ஒரு காட்சியில் நடித்து முடித்ததும், ஓகே அடுத்த சீனுக்கு போலாம் என்று போய்க்கொண்டேயிருப்பார். ஆனால் இப்போது நடித்து முடித்ததும் எப்படி இருக்கு? என்று அருகில் உள்ளவர்களிடம் கருத்து கேட்கிறார். காரணம், காமெடி ஒர்க் அவுட்டாகியுள்ளதா? இல்லையா? என்ற சந்தேகம் அவருக்கு ஏற்படுகிறது. ஆக, அவருக்கு தனது காமெடி மீது பயம் வந்துவிட்டது. அதனால் தான் மற்றவர்களிடம் கருத்து கேட்கிறார் என்கிறார் தாடி பாலாஜி.