சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பைரவா படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள படம் மெர்சல். தெறியை தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். தேனாண்டாள் பிலிம்ஸ் தனது 100வது படமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். நேற்று(செப்.,21) தான் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு உலகளவில் டிரண்ட்டாகி, அதிக பார்வையாளர்கள், லைக்ஸ்... என சாதனை மேல் சாதனை படைத்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மெர்சல் படத்திற்கு இப்போது புதிதாக ஒரு சிக்கல் உருவாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில், ஏ.ஆர்.பிலிம் பேக்டரி சார்பில் "மெர்சலாயிட்டேன்" என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வருகிறேன். இதற்கான தலைப்பை 2014-ம் ஆண்டிலே பதிவு செய்திருக்கிறேன். தற்போது அந்த தலைப்பை விஜய் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். ஆகவே, மெர்சல் படத்தின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று தமது மனுவில் கோரியிருந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம், அக்., 3-ம் தேதி வரை மெர்சல் படத்தின் விளம்பரத்தில் மெர்சல் பெயரை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. அதோடு இதுதொடர்பாக தேனாண்டாள் பிலிம்ஸ் பதிலளிக்க உத்தரவிட்டது.