ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் அரசியலுக்கு வருவது உறுதி; தமிழக மக்களுக்காக முதல்வராக எனக்கு விருப்பம் உள்ளது என நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், நடிகர் கமலை சென்னையில் நேற்று சந்தித்து பேசினார். இதனையடுத்து தனியார் பத்திரிக்கைக்கு கமல் பேட்டியளித்தார்.
நடுநிலைவாதி : பேட்டியில் அவர் கூறியதாவது: அரசிலில் நுழைவது என்பது தலையில் முள் கிரீடம் சூட்டுவது போன்றது. மக்கள் இடதுசாரியையோ, வலதுசாரியையோ விரும்பவில்லை. அதனால் நான் சரியான நடுநிலைவாதியாகவே இருக்க விரும்புகிறேன். அரசியலில் எனது நிறம் கருப்பு தான். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளடங்கியுள்ளது.
முதல்வராக விருப்பம் : புதிய தலைமுறை அரசியல்வாதிகளை நாம் கண்டெடுக்க வேண்டும். அப்பொழுது தான் புதைகுழியாக இருக்கும் அரசியலை வசிப்பிடமாக மாற்ற முடியும். நான் அரசியலுக்கு வருவது உறுதி. என் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக நான் என்னை தயார்படுத்தி வருகிறேன். சிறந்த வழிகாட்டுதலுடன் மக்களை சந்திப்பேன். தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் உள்ளது.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.