ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பீட்சா, ஜிகர்தண்டா என இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த கார்த்திக் சுப்புராஜை அடுத்த மணிரத்னம் என்று புகழ்ந்தனர். அவர் இயக்கிய மூன்றாவது 'இறைவி' படம் படு தோல்வியடைந்தது.
இறைவி படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது அதை முடித்த கையோடு தன்னுடைய தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கார்த்திக் சுப்புராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தார் தனுஷ். அதில் தானே ஹீரோவாக நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இறைவி தோல்வியை புரிந்து கொண்ட தனுஷ், அந்தப் படத்தை ட்ராப் பண்ணிவிட்டார்.
பிறகு, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்குவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் அப்படம் பற்றிய வேறெந்த தகவலும் வெளிவரவில்லை. தனுஷும் வடசென்னை, எனை நோக்கிப் பாயும் தோட்டா, விஐபி 2 படங்களில் பிஸியாகிவிட்டார்.
கார்த்திக் சுப்புராஜும் பிரபுதேவாவை வைத்து 'மெர்குரி' படத்தை எடுக்கத் துவங்கிவிட்டார். தனுஷ் நடிக்கும் படம் ட்ராப்பாகவில்லை என்றும் விரைவில் அந்தப் படத்தை இயக்குவேன் என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
அதாவது, முழுக்க முழுக்க அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதால் அந்தப்படத்தை எடுக்க நிறைய நாட்கள் ஆகுமாம். அதனாலேயே, அதற்கு முன்பு தனுஷும் தன் கைவசமுள்ள படங்களை முடிக்கட்டும், நாமும் அதற்கு முன்பாக 'மெர்குரி' படத்தை முடித்துவிடலாம் என்று தனுஷ் நடிக்கும் படத்தை தள்ளி வைத்தாராம் கார்த்திக் சுப்புராஜ்.
கேங்ஸ்டர் ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவரும் நடிக்கவிருக்கிறாராம். 2016 ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு 2018ல் துவங்குகிறது.